(இது இரகுபதி வாத்தியார் கதையின் தொடர்ச்சி இதை படிபதற்க்கு
முன் நேற்றைய blog –ஐ படிக்கவும்)
இரகுபதி வாத்தியார்...தொடர்ச்சி..
“சரி சும்மா டிசி கொடுக்கமுடியாதுன்னு சொல்லுங்க, அப்புறம்
ஏதாவது பிரச்சனை பண்ணினா உடனே டிசி கொடுக்குறேன்ன்னு சொல்லிடுங்க” என்றார் கல்வி
செல்வன்.
மேலாளர் பெற்றோர்களை அழைத்து காரணத்தை கேட்டார்.
குழந்தைகளுக்கு டிசி கொடுக்கமுடியாது என்றும் அப்படி அவர்கள் போனாள் மீண்டும்
ஒன்றாம் வகுப்பில் இருந்துதான் படிக்கவேண்டும் என்று பயமுறுத்தி அனுப்பிவைத்தார்.
மாரிமுத்துவின் வீட்டில் அனைவரும் கூடினார்கள், மாரிமுத்து
கேட்டார் “இப்ப செழியன் பள்ளிக்கூடத்தை தவிர மற்ற மூணு பள்ளிகளிலும் டிசி கொடுக்கமுடியாதுன்னு
சொல்லியிருகாங்க, இதுக்கு என்ன வழி?”
“டிசி ஒன்னும் வேணாம், இப்ப கல்வி உரிமைச்சட்டம் 2௦௦9 வந்த பிறகு குழந்தைகள் வந்தாலே சேர்த்துக்கணும்” என்று
இரகுபதி சொன்னார்.
“இல்ல சார் சேர்த்துக்கலாம், ஆனா கொஞ்ச நாள் கழித்து டிசி
தேவைப்படும், அதுவும் இவ்வளவு குழந்தைகள் இருக்கும் போது கண்டிப்பா வேணும்” என்று
செழியன் கூறினார்.
“ஸ்கூல பாரேன்ட்ஸ கூப்பிட்டு மிரடிருகங்கா, இப்ப மாரியப்பன்
போன் பண்ணி அவரு குழந்தகள் அங்கேயே படிக்கட்டும்ன்னு சொல்லிட்டார்” என்று ராஜா
சொன்னான்.
“ச்சே இது புது தலைவலியா இருக்கே இப்ப எல்லாரும்
பின்வாங்கிட்டா என்ன பண்ணுறது, இவ்வளவு கஷ்டப்பட்டதும் வேஸ்ட போயிடுமே...” என்று
காந்தி வருத்தப்பட்டார்.
செழியன் சொன்னார் “நீங்க ஒன்னும் கவலைப்பட பாட வேணாம்...
நாம இந்த லிஸ்ட் எடுத்திட்டு கல்வி அதிகாரிய பார்க்க போலாம், நீங்க போயிட்டு வாங்க
நானும் ராஜா, ஹரி அப்புறம் எல்லாம் சேர்ந்து ஊருல யாரும் டிசி பத்தி பயப்பட
தேவையில்லன்னு சொல்லுறோம்”.
செழியனும் ராஜாவும் குழந்தைகளின் பெற்றோர்களைப் பார்த்து
பயபடாதீங்கா, யாரும் டிசியா வைக்க முடியாது, நீங்க கேட்ட உடனே கொடுக்கணும் என்று
சட்டத்தில் உள்ள வழிமுறைகளை எடுத்துரைத்து கொண்டிருந்தனர். கல்வி செல்வனின்
பள்ளிக்கும் சென்று செழியனும் ராஜாவும் பேசப்போனர்கள்.
மேலாளர் செழியனிடம் கேட்டார் “எதுக்கு சார் நீங்க இவங்க
பின்னாடி அழையுறீங்க, நல்லாதானே ஸ்கூல் நடக்குது, என்ன எங்க ஸ்கூல மேல பொறாமைபட்டு
இதுமாதிரி பண்ணுறீங்களா”
“சார் நீங்க தப்பா நினைச்சிட்டு இருக்கீங்க, எனக்கு ஒன்னும்
பொறாமை கிடையாது, ஏதோ எங்க ஊரு குழந்தைகளுக்கு நல்லது பண்ணனும்ன்னு தான்” என்று
செழியன் சொன்னார்.
“ஏதோ நல்லவன் மாதிரி பேசுற நீயும் தனியார் ஸ்கூல் வைச்சு நடதிக்கிட்டுதானே
இருக்கே” என்ற மேலாளர் சொல்ல செழியனுக்கு கோபம் வந்தது.
“வார்த்தை அளந்து பேசுங்க.... அதிகமா ஆடாதீங்க அப்புறம்
பள்ளிக்கூடத்தை இழுத்து மூடவேண்டிவரும்” என்று செழியன் சொன்னார்.
“பாத்து இருந்துக்கோ, நம்ம அமைச்சர் பள்ளிக்கூடம்” என்று
எச்சரித்து அனுப்பினர்.
ராஜாவும் செழியனும் நடந்த விஷயத்தை மாரிமுத்துவிற்க்கு
தெரியப்படுத்தினர்.
“நீங்க ஒன்னும் பயபடாதீங்க, அவன் ஏதோ பொழப்பும் நடத்த
வந்தவன் பேசுறன்” என்று மாரிமுத்து சொன்னார்.
கல்வி செல்வனின் பள்ளியின் மேலாளர், கல்விசெல்வனை
தொடர்புகொண்டு நடந்ததை விளக்கினார்.
“விடுங்க... ஒரு ஸ்கூல் மூடினாலும் பரவாயில்லை பிரச்சனை
எதுவும் பண்ண வேணாம், இன்னும் ரெண்டு வருஷத்துல எலக்சன் என்றார்” என்று கல்வி
செல்வன் சொன்னார்.
“சார் அது இல்ல இன்னைக்கு எண்பது குழைந்தைகள், ஆனா நாளைக்கு
இதே மாதிரி மத்த ஊருலையும் ஆரம்பிச்சா அப்புறம் நம்ம எல்லா பள்ளிக்கூடங்கள
மூடவேண்டிவரும்” என்ற மேலாளர் கூறினார்.
“இப்ப என்ன பண்ணுறது... பள்ளிக்கூடம் மூடின மூடட்டும்,
அதுதான் நாலு இன்ஜினியரிங் காலேஜ், ஆர்ட்ஸ் காலேஜ், மூணு எஜுகேஷன் காலேஜ்,
மெடிக்கல் காலேஜ் கட்ட வேலைநடக்குது” என்றார்
“சார் நமக்கு
அதிகமா வருமானம் வர்றது இந்த பள்ளிகூடத்துல தான், இப்ப இன்ஜினியரிங்
காலேஜ், ஆர்ட்ஸ் காலேஜ், எஜுகேஷன் காலேஜ் இங்க எல்லாம் சீட் புல்லகுறாது ரொம்பவுமே
கஷ்டமா இருக்கு. அதுமட்டும் இல்ல இன்ஜினியரிங் காலேஜிலையும், ஆர்ட்ஸ் காலேஜிலையும்
வர்ற வருமானம் செலவுக்கு சரியாகிடும். இந்த பள்ளிக்கூடங்கள் தான் வருமானம் தருது”
என்று மேலாளர் சொன்னார்.
“ஓ... அப்ப பள்ளிக்கூடம் மூடவேண்டி வந்துச்சுன்னா பெரிய
பிரச்சனை ஆகிடுமே” என்று கல்வி செல்வன் சொன்னார்.
“சார் பெரிய பிரச்சனை ஆகிடும், நம்ம ஸ்கூல இன்னைக்கு
டொனைஷன் ஒரு இலட்சம் வாங்குறோம், அதுமட்டும் இல்லமா முப்பது ஆயிரதுல்ல இருந்து
எண்பது ஆயிரம் வரை ஸ்கூல பீஸ் வாங்குறோம். இன்னைக்கு ஒரு இலட்சம் கொடுத்து
இன்ஜினியரிங் படிக்க வரமாட்டாங்க, ஆர்ட் காலேஜ் சீட் வெறும் பத்து ஆயிரம்தான்.
நீங்க யோசிச்சுப் பார்த்து முடிவு பண்ணுங்க. அதுமட்டும் இல்ல குழந்தை ஃபிரிகேஜி
யில சேர்ந்துன பதினஞ்சு வர்ஷம் நமக்கு பீஸ் வந்துகிட்டேயிருக்கும், இந்த ஆர்ட்
காலேஜ்லையும் இன்ஜினியரிங் காலேஜ்லையும் மூணு வர்ஷம் இல்ல நாலு வர்ஷத்துக்கு தான்
பீஸ் வரும்” என்று மேலாளர் சொன்னார்.
“அப்ப என்ன பண்ணியாவது தடுத்து நிறுத்தனும். இப்ப யாரு இந்த
தொடக்க கல்வி அலுவலகத்தில அதிகாரி, அடுத்து இவங்க எதுக்கு இதை பண்ணுறாங்கன்னு முழு
விபரத்தையும் சேகரிச்சு சொல்லுங்க.. நாம அப்புறம் பேசலாம்” என்று கல்வி செல்வன்
சொன்னார்.
ஒரு மணிநேரத்தில் பள்ளியின் மேலாளர் கல்வி செல்வனை தொடர்பு
கொண்டு விளக்கமாக சொன்னார்.
“நீங்க ஒன்னு பண்ணுங்க, கல்வி அலுவலகம் போய் அங்க இருக்குற
அதிகாரிங்கள சரிக்கட்டு, பணத்தைப் பத்தி கவலைப்படவேணாம், முக்கியமா இந்த விஷயம்
கலெக்டர் அலுவலகம் போகக்கூடாது, யாரோ ஹிந்திகாரன் கலெக்டர இருக்கானம் பார்த்து
வேலைய முடிசிட்டுங்க, மாவட்டம் வரைப் போச்சுன பிரச்சனை ஆயிடும். இந்த ஊரு வாய
எப்படி அடைக்குறது?, என்ன பண்ணுனாலும் என் பேரு வெளியில வரக்கூடாது.” என்று கல்வி
செல்வன் கேட்டார்.
“சார் அத நான் பார்த்துகிறேன்” என்று மேலாளர் சொல்லிவிட்டு
வந்தார். கல்வி அதிகாரிகளைப் பார்த்து முன்னால் அமைச்சரின் சார்பாக அன்பளிப்புக்
கொடுத்துவிட்டு வந்தார். ஊருக்குள் மேலாளர் புதிய புரளி ஒன்றைக் கிழப்பினார்.
இரகுபதி வாத்தியார்க்கு பணிஇடமாற்றம் பிடிக்கவில்லை, மீண்டும் பள்ளி
திறக்கப்பட்டால் இங்கேயே வேலையில் இருக்கலாம் இதுதான் இரகுபதியின் நோக்கம்.
செழியன் தன்னுடைய பள்ளி வளர்ச்சி அடையவில்லை என்ற பொறாமையில் இதை கூட்டுசேர்ந்து
செய்கின்றார். இவர்கள் எல்லாம் ஊராட்சித் தலைவர் மாரிமுத்து உடன் சேர்ந்து கொண்டு
நடத்தும் நாடகம். மாரிமுத்து தனது சம்பந்திக்காக இதை செய்கின்றார், செழியனும்
மாரிமுத்துவின் சொந்தம்தான். பாவம் இதையெல்லாம் தெரியாமல் காந்தி வாத்தியாரும்
இன்னும் பலபேர் வேலையில்லாமல் அவர்களுடன் அழைகின்றார்கள். இவர்கள் பள்ளிக்கூடம்
திறந்தால் மட்டும் போதும் என்று அழைகின்றனர். பள்ளிக்கூடத்தை மாதிரிப் பள்ளியாக
மாற்றுவது வெறும் நாடகம்.
இந்த புரளி வெகு வேகமாக பரவியது. முன்பு விருப்பம்
தெரிவித்த நிறைய பெற்றோர்கள் தங்கள் கமுடிவில் மாற்றிக்கொண்டனர். இவர்களின்
குழுவிற்கும் ஒரு பெரிய பின்னடைவாக இருந்தது. இரகுபதி வாத்தியாருக்கு உடம்பு
சரியில்லை என்று பக்கத்து ஊரில் இருக்கும் ஒரு மருத்துவரைப் பார்த்து வந்தார்கள்.
மீண்டும் BP மாத்திரையை எடுக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுரை கூறினார்.
மூன்று நாள் கழித்து அனைவரும் இரகுபதியின் வீட்டிற்க்கு
வந்தார்கள். ஆர்வமாக வேலை பார்த்த செல்லபாண்டி போன்ற நபர்கள் வரவில்லை. காந்தி,
பெரிய மருது, ராஜா, செழியன் இன்னும் சிலபேர் இருந்தார்கள். இரகுபதியின் காதில்
விழுந்ததை எப்படி மறுப்பது, அதைப் பற்றி பேசுவது என்பது இரகுபதிக்கும்
மாரிமுத்துவிற்கும் குழப்பமாகவே இருந்தது.
இரகுபதி “உங்க காதுல வந்தது உண்மையில்ல, யாரோ வேணுமுன்னு
இதுமாதிரி அவதூறு பரப்புறாங்க” என்றார்.
“சார் உங்களைப்பற்றி எங்களுக்கு நல்லாத்தெரியும், எல்லாம்
அந்த பள்ளிக்கூடத்து மேனேஜர் பண்ணியிருக்கனும், நாங்க அன்னைக்குப் போகும்போதே ஒரு
மாதிரியா பேசினாரு” என்று ராஜா சொன்னான்.
“வாங்க இன்னைக்கே கல்வி அதிகாரிய பார்த்து பேசிட்டு
வருவோம், நாம காலம் கடத்தினோம் அவ்வளவுதான்...” என்று காந்தி சொன்னார்.
“வாங்க நம்ம இப்பவே ரெண்டு காருல போயிட்டு வரலாம்” என்று
மாரிமுத்து சொன்னார்.
இவர்கள் உதவி தொடக்கப்பள்ளி அதிகாரியை சந்தித்தார்கள். அவர்
“அய்யா நீங்க பசங்களோட லிஸ்ட் மட்டும் போதாது அவங்க பெற்றோர்களின் விண்ணப்பமும்
வேணும்” என்று கூறினார்.
மறுநாள் பெற்றோர்களிடம் விண்ணப்பம் கையொப்பத்துடன் வாங்கி
வந்தார்கள், இவர்களால் ஒரு 56 குழந்தைகளின் பெற்றோர்களிடம் மட்டும் வாங்கி
வரமுடிந்தது. அதிகாரி இந்த முறை வேறுவிதமாக கூறினார், குழந்தைகளின் எண்ணிக்கை
குறைந்ததற்க்கு பிரச்சனை பண்ணினார். கடைசியாக புதிய பள்ளிக்கூடம் திறக்க
விண்ணப்பம் மேல் அதிகாரிக்கு அனுப்புவதாக கூறினார், உத்தரவு வந்தவுடன் போன் பண்ணி
சொல்லுவதாக கூறி மாரிமுத்துவின் தொலைபேசி எண்ணையும் வாங்கிக்கொண்டார்.
ஒருவாரம் ஆனது, கல்வி அலுவலகத்தில் இருந்து எந்த விபரமும்
இல்லை. பள்ளிக் கட்டணம் கட்ட முடியாத பத்தாவது படிக்கும் குழந்தைகளின் கட்டணம்
கொடுக்கும் விழா கிராம சபையின் சார்பாக நடந்தது. இரகுபதி இலட்சுமிநாராயணனிடம்
விஷயத்தை சொன்னார், அவர் நேரில் போய் பார்த்துவிட்டு வரசொன்னார்.
மாரிமுத்துவும் இரகுபதியும் நேரில் கல்வி அலுவலரைப் பார்க்க
போனார்கள். ஆனால் அவர் அங்கு இல்லை மீட்டிங் போயிருபதாக சொன்னார்கள், இவர்கள் நாள்
முழுவதும் அங்கேயே காத்துகிடந்தர்கள். மாலை ஐந்து மணிக்கு கல்வி அதிகாரி வந்தார்.
அவரிடம் என்ன ஆனது என்று கேட்டார்கள். அடுத்த கல்வி ஆண்டில் தான் இதற்கான
ஏற்பாடுகள் நடக்கும் என்றும், பள்ளிகள் ஆரம்பித்து மூன்று மாதங்களுக்கும் மேல்
ஆகிவிட்டதால் இப்போதைக்கு முடியாது என்றும் கூறிவிட்டார்.
இரகுபதியின் வீட்டில் மீண்டும் அனைவரும் கூடினார்கள்.
இலட்சுமிநாராயணனிடமும் பேசினார்கள். இலட்சுமிநாராயணனின் சொன்னார் மாவட்ட ஆட்சியர்
அலுவலகத்திற்கு போனால் விரைவில் நடவடிக்கை எடுக்க வைய்புள்ளது. மற்ற நபர்களின்
கருத்தும் அதுவே. அடுத்தநாள் செழியன், ராஜா, இரகுபதி மற்றும் நான்கு நபர்கள் கல்வி
அதிகாரியைப் பார்த்து அந்த பெற்றோர்கள் கையொப்பம் கிட்ட விண்ணபங்களை வாங்கி அதை
மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கொடுக்க சென்றார்கள்.
கல்வி அலுவலர் விண்ணப்பத்தை கொடுக்க மறுத்தார். அவர் மாவட்ட
ஆட்சியாளரிடம் பேசியதாகவும், மாவட்ட ஆட்சியர் தான் அடுத்த கல்வி ஆண்டடில்
நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார் என்றார். இவர்கள் எவ்வளவோ கேட்டுப் பார்த்தும்
அவர் விண்ணப்பங்களை கொடுப்பதாக இல்லை. நானே இப்போ மாவட்ட ஆட்சியாளரிடம் போன்
போட்டு கொடுக்குறேன் நீங்க கொஞ்சம் வெளியில இருங்க என்று மாவட்ட கல்வி அலுவலரிடம்
பேசினார். இங்கு ஒரு பணிமாற்றத்தை மாற்றி திரும்பவும் அவரது ஊரிலேயே வேலைவேண்டும்
என்று சொல்லி ஒரு ஆசிரியர்
வந்திருப்பதாகவும், ஊரிலிருந்து கிராம சபை தலைவரின் சிபாரிசுடன் மாவட்ட ஆட்சி
தலைவரைப் பார்க்க போவதாகவும் பிரச்சனை பண்ணுவதாகவும் கூறினார். மாவட்ட கல்வி
அதிகாரி போன் அவரிடம் கொடுக்க சொன்னார். அலுவலக உதவியாளர் இரகுபதியை மட்டும் உள்ளே
அழைத்தார்.
“சார் இந்தாங்க மாவட்ட கல்வி அதிகாரி போனுல இருகாரு நீங்களே
பேசுங்க” என்று போனைக் கொடுத்தார்.
“சார் நீங்க நினைக்குற மாதிரி இப்ப எதுவும் பண்ணமுடியாது,
உங்களுக்கு எங்க புதுசா வேலை போட்டுருகான்களோ அங்கபோங்க” என்று மாவட்ட கல்வி
அதிகாரி கூறினார்.
“சார் நான் வந்தது...” என்று இரகுபதி ஆரம்பித்தார்.
“சார்.. நீங்க ஒன்னும் சொல்ல வேணாம், எல்லாம் அவரு
சொன்னாரு, இது முடியாது, நீங்க கலெக்டர பார்க்குறது வேஸ்ட். அப்புறம் கலெக்டருக்கு
இதெல்லாம் பிடிக்காது, வேலை பாருங்க..” என்று சொல்லிவிட்டு போனை வைத்துவிட்டார்.
“ம்ம்... அதுதான் நான் சொன்னேல்ல இது இப்ப நடக்காதுன்னு...
இப்ப உங்களுக்கு நிம்மதியா இருக்குமுல போங்க...” என்று உதவி கல்வி அதிகாரி
சொன்னார்.
பெரும் ஏமாற்றதுடன் வீட்டுக்கு கிளம்பினார்கள். வரும் வழியில்
செழியன் சொன்னார் “ரகு சார் எனக்கு என்னமோ ஒரு சந்தேகமா இருக்கு...”.
“ஆமாம் எனக்கும் ஒரு சந்தேகம் தான்... எங்கிட்ட மாவட்ட
கல்வி அதிகாரி பேசினாரு, அவரு என்னைய எதுவும் பேசவிடால... அவருகிட்ட இவரு என்ன
சொன்னாருன்னு தெரியல..” என்றார் இரகுபதி.
மாரிமுத்துவிடம் பேசினார்கள், நாளைக்கு நேரடியாக மாவட்ட
ஆட்சியாளரிடம் போவது என முடிவு செய்து, மறுநாள் ஆட்சியர் அலுவலக்கதிற்கு
சென்றார்கள். அங்கும் இவர்களுக்கு ஏமாற்றம்தான். ஆட்சியாளர் முதவர்கள்
மாநாட்டிற்கு இன்று காலையில் புறப்பட்டு சென்றுள்ளதாகவும், அதைமுடிதுவிட்டு மூன்று
நாட்கள் விடுமுறை எடுத்துள்ளார் என்றும் கூறினார்கள். அடுத்த வாரம் வரும்படி
ஆட்சியர் அலுவலகத்தில் கூறினார்கள்.
என்ன செய்வது என்று புரியவில்லை. பெரிய மருது கேட்டார் “நாம
பேசாம பேப்பர்ல நியூஸ் போட்ட என்ன”.
மாரிமுத்து “இது நல்ல ஐடியா...” என்றார்.
காந்தி “சும்மா பேப்பர்ல போடுவாங்களா?... நாம போராட்டம்
பண்ணுன போடுவாங்க” என்று சொன்னார்.
செழியன் “சார் நம்ம இவ்வளவு பேருதான் இருக்கோம், போராட்டம் பண்ண
ரெம்பபேர் இருந்தா நல்லா இருக்கும்”.
உடனே இரகுபதி “எங்க வீட்டுல இருந்து அஞ்சுபேர் வரோம்,
நீங்களும் உங்க வீட்டுல இருக்குற எல்லாரையும் கூட்டிட்டு வாங்க” என்றார்.
இப்போது புது உற்சாகம் வந்தது, இரகுபதி தர்ஷினிக்கும்
நந்தினிக்கும் போன் போட்டு வரச்சொன்னார். ஊர் மக்களின் சார்பாக தொடக்க கல்வி
அலுவலகதின் முன்பு நாளை போராட்டம் நடைபெறும் என்று ஊருக்கு தெரிவிக்கப்பட்டுது.
ஊரில் இருந்து சுமார் அறுபதுக்கும் மேற்பட்ட குடும்பங்களில்
இருந்து இரநூருக்கும் அதிகமான மக்கள் கூடினார்கள். தொடக்க கல்வி அலுவலகம் முன்பு
ஒரு பெரிய போராட்டம் நடைபெற்றது. அனைவரும் வெயிலில் உட்கார்ந்து மூடின பள்ளியை
திறக்கவேண்டும் என்று போராடினார்கள். தொடக்க கல்வி அதிகாரி மீட்டிங் என்று
சொல்லிவிட்டு அன்று அவர் அலுவலகம் வரவில்லை. விஷயம் பத்திரிக்கையாளர்களுக்கு
தெரிவிக்கப் பட்டு நிறைய பத்திரிக்கையாளர்கள் வந்திருந்தார்கள். அன்று மாலை
முன்னால் அமைச்சர் கல்வி செல்வனின் பள்ளி மேலாளர் மற்றும் கல்வி அதிகாரி இருவரும்
பத்திரிக்கையாளர்களை சந்தித்து போராட்டத்தை பற்றி வேறுவிதமாக சொல்லிவிட்டு
வந்தார். மறுநாள் ஊரே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்தது தங்களின் போராட்டம்
நாளிதழ்கள் வரும், வெளி உலகத்திற்கு தெரியும், இதனால் இவர்களது பணி விரைவாக நடக்கும்
என்று ஆயிரம் ஆயிரம் கனவுகளோடு காத்திருந்தனர்.
ஒரு செய்தித்தாளின் முதல் பக்கத்தில் இரகுபதி
குடும்பத்துடன் போராட்டம் நடக்கும் இடதில் உள்ள புகைப்படம் வந்திருந்தது, ஆனால்
செய்தி மட்டும் வேறு விதமாக இருந்தது. “பணி மாறுதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து
தலைமாசியியர் குடும்பத்துடன் நடுரோட்டில் தர்ணா....” என்று செய்தி வெளியிட்டு
இருந்தது. இன்னொரு செய்திதாளில் “நடுரோட்டில் நல்லாசிரியர்” என்ற தலைப்பில்
வெளியிட்டு இருந்தது. இந்த செய்திகளை படித்துவிட்டு இரகுபதியின் மனைவி
அழுதுவிட்டார்.
மீண்டும் ஊர் மக்கள் கூடினார்கள், இந்த முறை இன்னும் அதிக
மக்கள். வாங்க வாத்தியாரை நம்ம இந்த அதிகாரிகளிடம் போவோம். இந்த அநியாயத்துக்கு
ஒரு முடிவு கட்டுவோம் என்று பொங்கி எழுந்தனர். அதிகமானோர் பேரணியாக புறப்பட்டு
சென்றனர். கல்வி அலுவலக்கதின் முன்பு ஒரு பெரிய போராட்டம் நடைபெற்று
கொண்டிருந்தது. கல்வி அதிகாரியுடன் பேச்சுவார்த்தையில் போராட்டக்குழுவில் இருந்து
ஒரு பத்துபேர் உள்ளே இருந்தனர். கல்வி அதிகாரி சொன்னார் “சார் நீங்க எண்பது பசங்க
அப்புறம் நூறு பசங்க அப்படி இப்படின்னு சொன்னிங்களே இப்ப முப்பது பசங்க தான்
விருப்பம் தெரிவிச்சு இருகாங்க. ஸ்கூல் திறந்ததுக்கு அப்புறம் இந்த குழந்தைகளும்
வருவாங்கன்னு என்ன உத்திரவாதம். அதனால தான் எங்கனால பள்ளிக்கூடம் திறக்க முடியாது”
என்றார்.
உடனே “செழியன் சார் உங்களுக்கு நூறு குழந்தைகள் தானே வேணும்
என்னோட பள்ளிகூடத்துல இருக்குற எல்லா குழந்தைகளையும் அனுப்புறேன்..” என்றார்.
மாரிமுத்து “அதெல்லாம் வேணாம் நீ சும்மா இருப்பா” என்றார்
“இருக்கட்டும் நான் பணம் சம்பாதிக்க ஒன்னும் பள்ளிக்கூடம்
நடத்தல” என்று செழியன் சொன்னார்.
“நீங்க சொல்லுற மாதிரி அப்படி பண்ண முடியாது... உங்க
பள்ளிக்கூடத்துல இருக்குற எல்லா குழந்தைகளையும் இங்க சேர்க்க போதிய இடவசதி இங்க
இல்ல” என்று கல்வி அதிகாரி சொன்னார்.
செழியன் “சார் என்னோட பள்ளிக்கூடத்தை அப்படியே
கவர்ன்மென்ட்டுக்கு எழுதி கொடுக்குறேன், அதுல போதிய இடவசதி இருக்கு நீங்க போர்ட
மாத்தி ஸ்கூல நடத்துங்க....” என்றார்.
கல்வி அதிகாரி ஒத்துகொள்வதாக இல்லை. அவர் இவர்களின்
கோரிக்கையை தட்டிக்கழிப்பதிலேயே இருந்தார். வெளியில் சில இளைஞ்சர்கள் பத்திரிக்கையாளர்களிடம்
செய்தியைப் பற்றி காரசாரமாக விவாதித்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறிய தள்ளு
முள்ளு ஏற்பட்டு விட்டது. உடனே போலீஸ் படை வந்தது, போராட்டகாரர்கள் மீது தடியடி
நடந்துது. பிரச்சனை வேறு விதமாக திசைமாறியது, போராட்ட காரர்கள் கலவரத்தில்
ஈடுபடுவது போன்ற செய்திகள் செய்திதாள்களில் வந்தது. மறுநாள் செய்திதாளில் இரகுபதி
பணிஇடைநீக்கம் செய்யப்பட்ட செய்தியும் செய்திதாள்களின் வழியாக முதலில் வந்தது,
பிறகு அவருக்கு மாவட்ட கல்வி அலுவலகத்தில் இருந்து நோட்டிஸ் வந்தது.
இந்த செய்தியைக் கேள்விப்பட்டு இலட்சுமிநாராயணனுக்கும்
கோபியும் மறுநாள் காலையில் வந்துவிட்டார்கள். இந்த நிகழ்வு ஊர் மக்களை இணைக்க
உதவியது, இரகுபதி மீது அனுதாபம் கொண்டு நிறைய மக்கள் போராட்டத்திற்கு வந்தார்கள்.
கல்வி செல்வனின் பள்ளி மேலாளர் போரட்டாத்தைப் பற்றி அவதூறுகள் பரப்பியது ஊர்
மக்களுக்கு தெரியவந்தது. போராட்டம் கைவிடகூடாது என்று ஊர்மக்கள் அனைவரும்
விருப்பட்டனர். ஊர் மக்கள் அணிதிரண்டு கல்வி செல்வனின் பள்ளி முன்பு கூடி
பள்ளிக்கு எதிரா கோசம் எழுப்பினார்கள். “ஏழை மக்களின் இரத்தம் உறுஞ்சும் காட்டேரியே...
பள்ளியை மூடு”, கல்வி விற்றுகும் கயவர்களே... என்று கோஷங்கள் எழுபினர்கள்.
பள்ளிக்கு விடுமுறைவிடப்பட்டது, கல்வி செல்வனின் பள்ளிக்கு போலீஸ் பாதுகாப்பு
கொடுக்கப்பட்டது. இந்த செய்தி மற்ற ஊருகளுக்கும் பரவியதும் கல்வி ஆர்வம் கொண்ட
நிறைய மக்கள் போராட்டத்திற்கு ஆதரவாக வந்தனர்.
தொடர்போராட்டம் நடைபெற்றது ஒவ்வொருநாளும் போராட்டத்திற்கு
பக்கத்துக்கு ஊரிலிருந்து மக்கள் வந்து சேர்ந்துகொண்டே இருந்தனர். மிகப்பெரிய ஒரு
அகிம்சை போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, போரட்ட காரர்கள் யாரும் களைந்து
செல்லவில்லை. போராட்டம் மூன்று நாட்களுக்கும் மேலாக கடந்தது. பத்திரிகைகளை
செய்திகள் தினமும் வரத்தொடங்கியது. ஊர் மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக் செல்லவதை
நிறுத்திவிட்டு அவர்களையும் போராட்ட களத்திற்கு வரவழைத்தனர். போராட்டக்காரர்கள்
அங்கேயே சமைத்து குழந்தைகளுடன் போரட்டத்தில் ஈடுபட்டனர். கோபியின் தெரு நாடகங்கள்
எவ்வாறு பள்ளிக் கல்வி வணிகமாக்கப் பட்டுள்ளது என்பதை விளக்கியது.
‘அட்டைப்பூச்சிகள்’ என்ற கோபியின் நாடகம், எவ்வாறு இந்த தனியார் பள்ளிகள்
பெற்றோர்களிடம் பணத்தை ஊருஞ்சுகின்றன என்பதை விளக்கும் நாடகம் அனைவரிடமும் ஒரு
புரிதலை ஏற்படுத்தியது. புரட்சிபாடல்கள், சமூக விழிப்புணர்வு நாடகங்கள் என்று
தீவிர போராட்டம் நடைபெற்றது. பாரதியின் கவியும் பகத் சிங்கின் படங்களும் எங்கும்
நிரம்பிக்கிடந்தன. காந்தியின் முகமுடி விற்பனை படுஜோராக நடந்துகொண்டிருந்தது.
சேகுவேராவின் செங்கொடி ஏந்திய ஒரு இளைஞர் படை உருவானது.
போராட்டம் பல்வேறு தொலைகாட்சிகளில் அவ்வபோது ஒளிபரப்பாகி
வந்தது. நான்காவது நாள் உண்ணாவிரத்த போராட்டம் தொடங்கியது பள்ளிசெல்லும்
குழந்தைகளும் பங்கேற்றனர். சிலர் மயக்கம் அடைந்து கீழே விழும் காட்சி நேரடி
ஒளிபரப்பாக ஆகிக்கொண்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் நேரடியாக வந்து
பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைத்தார் ஆனால் போராட்ட குழு மூடிய பள்ளியை திறக்க
உத்தரவு இல்லாமல் எந்த பேச்சுவார்த்தைக்கும் வரமுடியாது என்று கூறிவிட்டனர்.
போரட்டகரர்கள் போலீசுக்கு எதிராகவும், கல்வி அதிகாரிக்கு
எதிராகவும் கோஷங்கள் எழுபினர்கள். போராட்ட இளைஞ்சர்களுக்கும் போலீசுக்கும் இடையே
மோதல் உருவானது. கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்த இடமே போர்களமாக மாறியது. போலீஸ்
போராட்டத்தில் ஈடுபட்டவர்களை துரத்தி துரத்தி அடிக்கும் காட்சி செய்தி சேனல்களில்
நேரடியாக மக்கள் பார்த்துகொண்டிருந்தனர். போலீஸ் களைந்து செல்லாதவர்களை கைது செய்ய
முயன்றனர், ஆனால் குழந்தைகள் எங்களையும் கைது செய்யுங்கள் என்று வண்டியில்
ஏறியதால் காவல்துறையால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இந்த காட்சிகள் பல்வேறு தேசிய
செய்தி சேனல்களில் ஒளிபரப்பாகி நேரடியாக ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. தேசிய மனித
உரிமை ஆணையம் மாவட்ட ஆட்சியாளரிடம் அறிக்கை அனுப்ப கேட்டது.
ஐந்தாம் நாள் போராட்டம் இன்னுமும் தீவிரமானது. இந்திய
மாணவர் சங்கம், தமிழ்நாடு ஆசியர்கள் சங்கம், பெண்கள் சங்கம் என பல்வேறு அமைப்புகள்
போரட்டதிற்க்கு ஆதரவும் தந்தது. தமிழ்நாடு அரசு ஆசியர்கள் சங்கம் தமிழ்நாடு
முழுவதும் கருப்பு சட்டை அணிந்து பணிக்குச் செல்வதென அறிவித்தது. பல்வேறு
கல்லூரிகளில் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் மாணவர் சங்கத்தால் அறிவிக்கப்பட்டது.
சட்ட கல்லூரி மாணவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிய போராட்டம் அறிவித்தது.
முதல்வர் அலுவலகத்திற்கு விஷயம் சென்றவுடன். முதல்வர்
அவர்கள் மாவட்ட ஆட்சியாளரிடம் விபரத்தைக் கேட்டார். மூடிய பள்ளியை திறப்பதற்காக
போராட்டம் நடைபெறுவதாக கூறினார். இந்த சின்ன விஷயத்தை ஏன் இவ்வளவு பெரிய
போராட்டமாக மாறியது, பள்ளியை மீண்டும் திறங்கள் என்றார் முதல்வர். தன்னிடம் தகவல்
தாமதமாகவே வந்ததாகவும், இப்போது போராட்டக் காரர்கள் கல்வி அதிகாரிகள் மீது
நடவடிக்கை எடுங்கள், போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுங்கள் என்று பல்வேறு
கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள். முதல்வர் அவர்கள் இதுவரை நடந்தவைகளை விபரமாக
கேட்டுவிட்டு சொன்னார் முதலில் மாவட்ட காவல் துறை அதிகாரியை வேறு மாவட்டத்திற்கு
மாற்றலாம், கல்வி அதிகாரியை தற்காலிய பணிநீங்கம் செய்யுங்கள் என்றார்.
மாவட்ட ஆட்சியர் இந்த அறிவுப்புகளை அறிவித்தும் போராட்டம்
கைவிடமுடியாது என்று சொல்லிவிட்டனர். முதல்வரிடன் நேரடியாக நாங்கள் பேசவேண்டுமென்று
புதிய கோரிக்கையை வைத்தார்கள். மாவட்ட ஆட்சியாளர் எவ்வளவோ முயற்ச்சி செய்தும்
பயனில்லை, மீண்டும் முதல்வர் அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தார். கடைசியாக
முதல்வர் போராட்டகுழுவுடன் பேச்சுவார்த்தைக்கு வரச்சொன்னார். இரகுபதி, மாரிமுத்து,
இலட்சுமிநாராயணன், கோபி, செழியன், காந்தி, பெரிய மருது, ராஜா மற்றும் சில ஊர்
பெரியவர்கள் அடங்கிய பதினைந்து பேர்கொண்ட குழு முதல்வரை சந்திக்க சென்னைக்கு
சென்றது. போராட்டகாரர்கள் பேச்சுவார்த்தை குழு திரும்பி வரும் வரை இங்கையே
இருக்கபோவதாக அறிவித்தனர்.
தலைமைசெயலகத்தில் ஒரு பெரிய அறையில் பேச்சுவார்த்தை
நடைபெற்றது. முதலமைச்சர், கல்வி அமைச்சர், உயர் ஐஏஎஸ் அதிகாரிகள், உள்துறை
செயலாளர், முதல்வரின் தனி செயலாளர் இன்னும் சில அதிகாரிகள் இருந்தனர். ஊர்
மக்களின் சார்பாக முதமைச்சருக்கு நன்றியும் வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது.
முதல்வர் அவர்கள் போராட்டம் வாபஸ் வாங்கியதற்கு நன்றி கூறினார்கள்.
முதலமைச்சர் அவர்கள் கேட்டார்கள் “உங்கள் ஊரில் மூடிய
பள்ளியை மீண்டும் திறப்பது ஒரு சாதாரணமான காரியம். நீங்கள் மாவட்ட ஆட்சியர்
அவர்களிடம் முறைப்படி விண்ணப்பம் கொடுத்திருந்தால் எளிதில் முடிந்திருக்கும். அப்படி
செய்யாமல் சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் படித்த சமூக அக்கறை உடைய நீங்களே
இப்படி நடந்து கொள்ளலாமா?”
இரகுபதி பேசினார் “மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு
வணக்கம், எங்களுடைய கோரிக்கையை போராட்டமாக மாற்றியதற்கு காரணம், தொடக்க கல்வி
அதிகாரி அவர்கள்தான். எங்களுடைய விண்ணப்பம் முறைப்படி இருந்ததது, ஆனால் அவரின்
நடவடிக்கைகளில் முறையில்லை, அவர் பள்ளியை மீண்டும் திறக்க ஓராண்டுகள் ஆகும்
தற்போது முடியாது என்று கூறினார். அவர் கல்வியை விற்க்கும் விற்பனைப்
பிரதிநிதிகளுடன் சேர்ந்துகொண்டு ஏழைகுழந்தைகளின் வாழ்வில் இருளேற்ற செயல்பட்டார்.
எங்களுடைய போராட்டம் வெறும் ஒரு சிறிய கிராமத்தின் போராட்டம் மட்டும் அல்ல,
எத்தைனையோ சாமானியர்கள் தினமும் சந்திக்கும் பிரச்சனைகளின் ஒட்டு மொத்த விளைவு”
முதலமைச்சர் அவர்கள் “உங்கள் பிரச்சனைகளை அதாவது மக்களின்
பிரச்சனைகளையும் குறைகளையும் விரைவாக நிவர்த்தி செய்ய முதலமைச்சரின் தனிப்பிரிவு
உள்ளது, உங்கள் கோரிக்கைகள் அங்கே பதிவு செய்திருக்கலாம். உங்கள் நியாமான
கோரிக்கைகள் பரிசிலித்து உடனே சம்பந்தபட்ட துறையின் வாயிலாகவோ அல்லது மாவட்ட
ஆட்சியர் அவர்களது வழியாகவோ நிவர்த்தி செய்ய உடனடி ஏற்பாடு செய்யபட்டிருக்கும்.
நீங்கள் இந்த வசதிகளைப் பயன்படித்தியிருக்கலாம், அப்படி செய்திருந்தால் இவ்வளவு
பெரிய பிரச்சனையாக ஆகியிருக்காது” என்று கூறினார்.
பெரிய மருது “எங்களில் பலபேருக்கு இதுபோன்ற வசதிகள் இருபது
தெரியவில்லை; எங்கள் குழுவில் உள்ள சில நபர்களுக்கு தெரிந்திருந்தும் பயன்படுத்த
தயக்கம், இதற்காக நாங்கள் வருந்திகின்றோம்” என்றார்.
முதலமைச்சர் அவர்கள் “உங்கள் கோரிக்கையான தொடகப்பள்ளி
மீண்டும் திறபதற்கான ஆணையை அறிவித்த பிறகும் போராட்டம் செய்வது சரிதானா?” என்று
கேட்டார்.
மாரிமுத்து சொன்னார் “வணக்கம்... எங்களுடைய கோரிக்கை மூடிய
பள்ளியை மீண்டும் திறப்பதற்க்கு மட்டும் ஆரம்பித்தோம் ஆனால் அதற்குபின் நடந்த சில
சம்பவங்களால் தனியார் பள்ளிகளின் வியாபார நோக்கம் எந்த அளவு உள்ளது என்பதை
புரிந்துகொண்டோம். எனவே எங்கள் ஊரில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளையும் மூடவிட்டு
அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்றை ஆரம்பிக்க வேண்டும். இது எங்கள் ஊரின் சார்பாக நாங்கள்
வைக்கும் பணிவான வேண்டுகோள்”
முதலைமைச்சர் அவர்கள் “அரசு மேல்நிலைப்பள்ளி ஆரம்பிபதற்கான
உங்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்கும், அதே சமயம் காரணமில்லாமல் உங்கள் ஊரில்
செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளை மூடுவது எந்த அளவு நியாமான காரியமா? இது ஜனநாயக
அரசு; காரண காரியம் இல்லாமல் தனியார் பள்ளிகளில் நிர்வாகத்தில் தலையிட்டு அதுவும்
பள்ளிகளை மூடுவது என்பது ஒரு சர்வாதிகார போக்கிற்கு எடுத்துச்செல்லும் அல்லவா?” என்று கேட்டார்.
கோபி அவர்கள் “முதல்வர் அவர்களுக்கு வணக்கம், எங்களுடைய
கோரிக்கையை நியாமானது. தனியார் பள்ளிகளின் இன்றைய போக்கை அரசு கவனிக்க வேண்டும்.
ஆங்கிலவழிக் கல்வி, தரமான கல்வி என்று ஆசைவார்த்தை கூறி மக்களின் பண்ணதை
பறிப்பதில் குறியாய் செயல்பட்டு வருகின்றது.”
முதலமைச்சர் அவர்கள் “அரசுப்பள்ளிகளோடு ஒப்பிடும்போது
தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை மிகவும் குறைவு, அது மட்டும் அல்ல தனியார் பள்ளிகள்
கட்டணம் அரசு நிர்ணயம் செய்கின்றது, இது அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் செல்லும்.
அது சிபிஎஸ்இ அல்லது ஐசிஎஸ்இ பள்ளிகளனாலும் செல்லும்[1]. கட்டாய
கல்வி உரிமைச்சட்டம் அமல்படுத்தப்படு அரசு முறையாக கவனிகின்றது.”
கோபி அவர்கள் “நீங்கள் சொல்லுவது சரிதான். அரசு தேவையான
நடவடிக்கைகளை எடுத்துவருகின்றது. ஆனால் வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகள்
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி எப்படியெல்லாம் தப்பிக்கலாம் என்றுதான்
செயல்பட்டு வருகின்றது. அரசு நன்கொடைகளை தடைசெய்தது, ஆனால் இப்போது வேறுவிதமாக
நடைபெற்று வருகின்றது, எல்கேஜி சேர்க்கைக்கு சுமார் 17 இலட்சம் வரை நன்கொடைகள்கள்
இப்போது அன்பளிப்பாகக் வழங்கப்படுகின்றது[2]. அதுமட்டும் அல்ல தனியார் பள்ளிகள் பள்ளியில்
தான் நோட்டு, புத்தகங்கள், பேக், யுனிஃபார்ம், பென்சில் பேனா என்று அனைத்தையும்
வாங்கவேண்டும் என்று நிர்பந்தம் செய்து அதிக விலைக்கு விற்பனை செய்கின்றன. இதை
எதிர்த்து பொதுநல வழக்கு ஓன்று உயர்நீதிமற்றதில் உள்ளது[3].”
முதலமைச்சர் அவர்கள் கல்வி அமைச்சர் அவர்களைப் பார்த்தார்.
கல்வி அமைச்சர் “நீங்கள் சொல்லுகின்ற ஒரு சில பள்ளிகளை
உதாரணமாக வைத்துக்கொண்டு அனைத்துப் பள்ளிகளும் நன்கொடை வசூல் செய்கின்றன என்ற
குற்றசாட்டை ஏற்றுகொள்ள முடியாது. நம்முடைய அரசுதான் அரசுப்பள்ளிகள் படிக்கும்
குழந்தைகளுக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் விலையில்லாமல் கொடுக்கின்றது.
நோட்டு, புத்தகங்கள், சீருடை, மதிய உணவு, மிதிவண்டி, பண உதவி, கணிபொறி இன்னும்
தேவையான அனைத்து படிப்பு சமபந்தமானதையும் விலையில்லாமல் கொடுகின்றோம். இதுபோன்று
வேறு எந்த மாநிலமும் செய்வதில்லை. அதன் பிறகும் தனியார் பள்ளிகளில்
விரும்புகின்றார்கள் என்றால் அது பணவசதி உடைய பெற்றோர்களின் விருப்பம்”
இலட்சுமிநாராயணன் “சார் தமிழ் நாட்டில் அரசுப்பள்ளிகள் தான்
எண்ணிக்கையில் அதிகமாக உள்ளது அதை நங்கள் ஒத்துக் கொள்கின்றோம், ஆனால் தனியார்
பள்ளிகளில் தானே சேர்கை ஒவொவொரு ஆண்டும் அதிகரிக்கின்றது. சுமார் 80 சதவீதத்திற்க்கும் மேல் நகர்புற
குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர்வதாக ASER 2012 சொல்கின்றது
மேலும் கிராம புறங்களிலும் தனியார் பள்ளிகள் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து
வருகின்றது.[4]
நீங்கள் கூறுவது போன்று வசதியானவர்கள் மட்டும் தனியார் பள்ளிகளில் தங்கள்
குழந்தைகளை அனுப்புவது கிடையாது. எத்தனனையோ ஏழைகள் தங்கள் குழந்தைகளை இந்த
பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். நம்முடைய சென்னை மாவட்டத்தை உதராணமாக எடுத்து பார்போம்.
2011-12 ஆம் ஆண்டில் வெறும் 7 சதவீதம் குழந்தைகள் மட்டும்
அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ளனர், இது 2005-06 ஆண்டில் 18 சதவீதமாக இருந்தது.[5] இப்போது சொல்லுங்கள் தனியார் பள்ளிகளில்
பணக்காரர்கள் மட்டும் தங்கள் குழந்தைகளை அனுபுகின்றார்களா? இது தமிழ் நாட்டில்
மட்டும் அல்ல இந்திய முழுவதும் பெரும்பாலுமான மாநிலங்களில் இதுதான் இன்றைய நிலை.[6]
முதலைமைச்சர் அவர்கள் “சென்னை மாவட்டத்தில் உள்ள
அரசுப்பள்ளிகள் இவ்வளவுதான புதிய குழந்தைகளின் சேர்கை?” என்று ஆச்சிரியப்பட்டார்.
கல்வித்துறை செயலாளர் “சார் அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை
செய்கின்றது. தனியார் பள்ளிகளில் சேர்ப்பது என்பது பெற்றோர்களின் விருப்பம் அதை
ஏன் தடுக்க வேண்டும்?”
கோபி “அரசின் கொள்கைகள் ஒரு சமத்துவ சமூகத்தை அமைக்ககூடிய
வகையில் இருக்க வேண்டும் என இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்கின்றது. இன்று
தனியார் பள்ளிகள் ஏழை பணக்காரன் என்ற பிரிவினையை ஆழமாக்கி வருகின்றது. ஏழை
பணக்காரன் என்ற பிரிவினையை ஏற்படுத்தும் கல்விமுறையில் ஏன் மாற்றம் கொண்டு
வரக்கூடாது? ஒருபக்கம் அனைவருக்கும் இலவச கட்டாய கல்வி சட்டத்தை மட்டும்
இயற்றிவிட்டு நடைமுறைப்படுத்தாத அரசாங்கம்[7]
மற்றொரு பக்கம் விதிகளை மதிக்காத வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகள் இடையில்
பாவம் அப்பாவி மக்களும் கல்வியும் சமூகமும் தான் திசைமாறி சென்றுகொண்டிருகின்றது.”
கல்வித்துறை செயலாளர் அவர்கள் “சார் கல்வி அடிப்டை
உரிமைச்சட்டம் நிறைவேற்றி அனைவருக்கும் கல்வி என்ற நிலை உள்ளது. தனியார்
பள்ளிகளால் என்ன பிரச்சனைகள் உள்ளது? பெரும்பாலும் தனியார் பள்ளிகள் நல்ல
ரிசல்ட்டை கொடுக்கும் பள்ளிகளாகவே உள்ளது”
இலட்சுமிநாராயணன் “ஆம் ஒத்துகொள்கின்றோம் தனியார்
பள்ளிகளில் தான் அதிக மதிப்பெண்கள் மற்றும் “ரேங்க்” வாங்கும் மாணவர்கள் அதிகமா
உள்ளனர். இதை பண்ணுவதற்கு தனியார் என்னெவெல்லாம் செய்கின்றது தெரியுமா? ஒரு மாணவன்
படிப்பில் மந்தமாக இருந்தால் அவனை தேர்வு எழுத அனுமதிப்பது கிடையாது[8],
மாணவர்களை கட்டாய பயிற்சி வகுப்பிற்கு அனுப்புதல், அதுமட்டும் அல்லாமல் முறைகேடாக
பத்தாம் வகுப்பு பாடங்கள் ஒன்பதாம் வகுப்பு முதலும், பணிரெண்டாம் வகுப்பு பாடங்கள்
இரண்டு வருடம் நடத்தப்படுகின்றது. இது பெரும்பாலுமான வியாபார நோக்கம் உடைய தனியார்
பள்ளிகளை நடைபெறுகின்றது.
கோபி “இதுமட்டும் அல்ல இன்று நம்முடைய சமூகத்தில் தாய்மொழி
கல்வி தரமற்ற கல்வி என்ற சமூக மனநிலை உருவாக காரணமாக இருந்தது வியாபார நோக்கம்
உடைய தனியார் பள்ளிகள் தான். நம்முடைய முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம்
அவர்கள் தமிழ்வழிக் கல்வியில் தான் பயின்றார்; நம்முடைய உச்சநீதிமன்ற தலைமைநீதிபதி
சதாசிவம் அவர்கள் தமிழில்தான் பள்ளிப் படிப்பை முடித்தார், இன்னும் சொல்லபோனால்
இன்று உயர் பதிவிகளில் உள்ள பெரும்பாலோனோர் தாய்மொழியில் கல்வி கற்றவர்களே.
கல்வியில் வளர்ச்சி அடைந்த பெரும்பாலுமான நாடுகளில் தாய்மொழியில்தான் கல்வி
உள்ளது. ஆனால் இன்று நம்நாட்டில் தாய்மொழி கல்வி பயனற்றது; ஆங்கிலவழி கல்விதான்
சிறந்தது என்ற ஒரு சமூக மனநிலையை உருவாகிஉள்ளது, இதற்கு முக்கியமான காரணம் வியாபார
நோக்கம் உடைய தனியார் பள்ளிகள் தான்”.
கல்வி அமைச்சர் அவர்கள் “கல்வி அடிப்டை உரிமை
என்றாகிவிட்டது. நம்முடைய முதல்வர் அவர்கள் ஆணைப்படி அனைவருக்கும் தரமான கல்வி
என்ற குறிகோளுடன் அதற்கான திட்டங்கள் வகுத்து செயல்பட்டு வருகின்றோம். தனியார்
பள்ளிகளின் அரசு முறையாக கவனிகின்றது விதியை மீறும் தனியார் பள்ளிகளின் மீது அரசு
நடவடிக்கை எடுக்கதவறுவதில்லை[9]
நீங்கள் சொல்லும் ஒருசில நாளிதழ்களில் வந்த செய்தியை மட்டும் வைத்துக்கொண்டு
தனியார் பள்ளிகளே வேண்டாம் என்று முடிவெடுப்பது ஒரு தவறான காரியம்”
இலட்சுமிநாராயணன் “தரமான கல்வியை அனைவருக்கும் அளிக்க
நினைகின்றது அரசு, ஆனால் தற்போதைய சூழ்நிலையில் அனைவருக்கும் தரமான கல்வி
கொடுப்பது முடியாத காரியம். அனைவருக்கும் சமமான கல்வி என்று இருந்தால் மட்டுமே,
அனைவருக்கும் தரமான கல்வியை கொடுக்கமுடியும். கல்வி என்பது வசதிபடைத்த
ஒருசிலவர்கள் மட்டும் அனுபவிக்கும் தனிப்பட்ட சொத்து அல்ல. கல்வி இந்த சமூகத்தின்
சொத்து. கல்வியில் சமுத்துவம் என்ற நிலை இருந்தால் மட்டுமே ஒரு சமத்துவமான சமூகம்
உண்டாகும்”
முதலமைச்சர் அவர்கள் “தனியார் பள்ளிகளின் மீது நீங்கள்
கூறுகின்ற அனைத்து குற்றசாட்டுகளையும் அரசு இனி கவனிக்கும்” என்று கூறிவிட்டு
போராட்ட குழுவில் வந்த அனைவரையும் வெளியில் இருக்கச் சொன்னார்.
உள்ளே முதலமைச்சர் கல்வி அமைச்சர் மற்றும் உயர்
அதிகாரிகளுடன் கலந்தாலோசித்துக் கொண்டிருந்தார்.
முதலமைச்சர் அவர்கள் “அவர்கள் சொல்லும் குற்றசாட்டுகள் எந்த
அளவிற்கு உண்மை?” என்று கேட்டார்.
கல்வி அமைச்சர் “வணக்கம். நம்முடைய அரசு அனைவருக்கும் தரமான
கல்வி அளித்துகொண்டிருக்கும்போது இதுபோன்ற குற்றசாட்டுகலுக்கு வழியில்லை” என்றார்.
முதலைமைச்சர் “இந்த குற்றசாட்டுகளை நாம் கவணிக்க வேண்டும்.
தனியார் பள்ளிகளின் உண்மை நிலையை அறிய வேண்டும் அதற்கான வழிகளை பாருங்கள்”
கல்வித்துறை செயலாளர் அவர்கள் “இதற்க்கு நிறைய காலம் தேவை.
முறையான சமூக ஆய்வின் மூலம் மட்டுமே தனியார் பள்ளிகளால் எந்த மாதிரியான விளைவுகள்
ஏற்பட்டுள்ளது, அது நன்மையா? தீமையா? என்று பகுத்தாய்வு செய்யமுடியும்”
முதலமைச்சர் அவர்கள் “காலதாமதம் வேண்டாம் அவர்கள் சொன்ன
குற்றசாட்டுகள் எந்த அளவிற்கு உண்மைதன்மை உள்ளது என்பதை ஒரு சிறிய ஆய்வின் மூலம்
கண்டிபிடித்து விடலாம். தமிழ் நாட்டில் உள்ள எத்தனை தனியார் பள்ளிகள் அனைவருக்கும்
கல்வயுரிமைசட்டத்தின் படி குழந்தைகளை சேர்த்துள்ளன என்ற அறிக்கை எனக்கு வேண்டும்.
அடுத்து பள்ளிகள் எவ்வளவு நன்கொடைகள் வசூல் செய்கின்றன என்ற அறிக்கை மக்களிடம்
நேரடியாக கருத்து கணிப்பு எடுத்து அதன் அறிக்கையை சமர்பிக்க வேண்டும், இந்த
இரண்டும் ஒரு வாரத்திற்குள் முடிக்கவேண்டும்” என்று கட்டளையிட்டார்.
போராட்டகுழுவினரை உள்ளே அழைத்தார்கள்.
முதலமைச்சர் அவர்கள் “உங்கள் கோரிக்கையான உங்கள் ஊரில் அரசு
மேல்நிலைப்பள்ளி அமைக்க ஏற்பாடு செய்யப்படும். தற்போது போதிய இடவசதி இல்லாததால்
தொடக்கப்பள்ளி முதலில் தொடங்கப்படும். மேல்நிலை பள்ளி செயல்பட தேவையான கட்டிட
வசதிகள் செய்து முடிக்கப்பட்டு அடுத்த ஆண்டுமுதல் மேல்நிலை பள்ளி செயல்படும்”
என்றார்.
செழியன் “முதல்வர் அவர்களுக்கு நன்றி. கட்டிடம் வேண்டுமென்றால்
என்னுடைய பள்ளியை அரசிற்கு கொடுகின்றேன். அதில் போதுமான வசதிகளும் விளையாட்டு
மைதனதுடன் உள்ளது. அரசு மேல்நிலை பள்ளியை இந்த ஆண்டுமுதலே தொடங்கலாம், போதுமான
மாணவர்களும் உள்ளனர்”
முதலமைச்சர் அவர்கள் “அது உங்களின் வாழ்வாதாரத்தை
பாதிக்காதா?” என்று கேட்டார்
செழியன் “நான் பள்ளிக்கூடம் தொடங்கியது பணம் சம்பாதிக்க
வேண்டும் என்று அல்ல. படித்துவிட்டு ஆசிரியர் பணிகிடைகவில்லை அதனால் பள்ளிக்கூடம்
ஆரம்பித்தேன். தற்போது ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்வாகியுள்ளேன், விரைவில்
பணிகிடைத்துவிடும் அதனால் எனக்கு பிரச்சனை இல்லை”
இரகுபதி வாத்தியார் “முதல்வர் அவர்கள் எங்களுடைய மற்றொரு
கோரிக்கையான வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகளை எங்கள் ஊரில் மூட நடவடிக்கை
எடுக்க வேண்டும்”
முதலமைச்சர் அவர்கள் “உங்களுடைய இந்த கோரிக்கையை எங்களால்
ஒன்றும் தற்போது செய்ய முடியாது. நீங்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை ஆராய்ந்து
பார்க்காமல் எந்த ஒரு முடிவும் அவசரமாக எடுக்க முடியாது. அப்படி செய்தால் அது ஒரு
முறையற்ற நிர்வாகத்திற்கு முன் உதராணமாக ஆகிவிடும். உங்கள் குற்றச்சாட்டுகளை ஆய்வு
செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது, அதன் ஆய்வு வெளிவந்தவுடன் அதற்கான முடிவுகள்
எடுக்கப்படும்”
இலட்சுமிநாராயணன் “எங்கள் குற்றச்சாட்டுகள் அனைத்தும்
உண்மையே. உங்களுடைய ஆய்வில் நிச்சயம் தெரியவரும். எங்களுடைய போராட்டம் தற்காலியமாக
நிறுத்திவைக்கின்றோம். அரசு நல்லதொரு முடிவை எடுக்கும் என்பதில் எங்களுக்கு
நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. எங்களின் ஊரின் சார்பாக உங்களுக்கு எங்கள் மனமார்ந்த
நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்”
முதலமைச்சர் “உங்கள் ஊரில் மேல்நிலை பள்ளி திறப்பதற்கான
அனைத்து ஏற்பாடுகளையும் கல்வித்துறை செய்யும். இரண்டு வாரங்களுக்குள் பள்ளியின்
திறப்புவிழா நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நன்றி”
ஊருக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. போராட்டக்குழு
சென்றவுடன் மிகப்பெரிய வரவேற்ப்பு அளிக்கப்பட்டது. ஊர்மக்கள் போராட்ட களத்தில்
இருந்து நடைபயணமாக வெற்றியை கொண்டாடிகொண்டி சென்றார்கள். மற்ற ஊர்காரர்களுக்கும்
இது ஒரு முன்மாதிரியாக இருந்தது. பக்கத்துக்கு கிராமமக்களும் வந்து தங்கள் ஊரிலும்
இதுபோன்று அரசுப்பள்ளி தொடங்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தனர். இலட்சுமிநாராயணன்,
இரகுபதி வாத்தியார், கோபி, செழியன், பெரிய மருது, ராஜா, காந்தி ஆசிரியர் மற்றும்
பலர் சேர்ந்து கொண்டு “அட்டைபூச்சிகள்” என்ற சமூக விழிப்புணர்வு நாடகத்தை மற்ற
ஊர்களிலும் நடத்தினர். வியாபார நோக்கம் உடைய தனியார் பள்ளிகள் எவ்வாறு மக்களின்
பணத்தை பறிகின்றது என்பதை அட்டைபூச்சிகள் நாடகம் விளக்கிகூறியது.
பத்துநாட்கள் ஆனது, முதல்வர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு
வந்தது. இலட்சுமிநாராயணன், இரகுபதி வாத்தியார் மற்றும் கோபியும் சென்னைக்கு
சென்றார்கள். முதல்வர் மற்றும் தலைமை செயலாளர் அவர்களிடம் ஒரு சந்திப்பு நடந்தது.
முதல்வர் அவர்கள் “வணக்கம். நீங்கள் கூறியது போல்தான்
எங்களுடைய முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. பெரும்பாலுமான தனியார் பள்ளிகள்
கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுதுவதில்லை, பெரிய பள்ளிகள் நன்கொடைகளை அன்பளிப்பு
என்ற பெயரில் வாங்குகின்றது. எங்களுக்கு இன்னும் பல தகவல்கள் வேண்டும், உங்களிடம்
பேசினால் இன்னும் நிறைய தகவல்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது”
கோபி “எங்களுடைய அனுபவத்தின் அடிப்படையில் இதை
சொல்கின்றோம். முக்கியமான பிரச்சனையாக நாங்கள் கருதுவது கல்வியின் தரம். வியாபார
நோக்கம் உடைய பள்ளிகளால் கல்வி திசைதிரும்பி சென்றுகொண்டிருகின்றது. முக்கியமான
விளைவு தாய்மொழி கல்வியில் இருந்து மாறி ஆங்கிலம் முறை கல்விதான் சிறந்தது என்ற
மனநிலை உருவாகவிட்டது. ஆங்கிலம் கற்றுக்கொள்வது தவறு அல்ல, ஆனால் குழந்தைகள்
தாய்மொழியை தவிர்த்து அந்நியமொழியில் கற்றும்போது அவர்களுக்கு புரிந்துபடிப்பதில்
பிரச்சனை உள்ளது”
முதல்வர் அவர்கள் பல கேள்விகள் கேட்டார், மத்திய அரசியின்
பள்ளிகளால் எவ்வாறு மாநில கல்வியில் மாற்றம் வருகின்றது, தனியார் பள்ளிகலுக்கும்
மக்களின் சமூக முன்னேற்றதிற்கும் உள்ள தொடர்பு, தாய்மொழி மொழிக்கும் கல்வியின்
தரத்திற்கும் உள்ள உறவு இன்னும் நிறைய கேள்விகள் கேட்டார். இவர்களின் உரையாடல்
சுமார் ஒருமணிநேரத்திற்கும் மேல் இருந்தது.
இலட்சுமிநாராயணன் “உங்களை போல் கல்வியில் ஆர்வம் உடைய
முதலமைச்சரை நான் பார்த்ததேயில்லை. உங்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகள்.
உங்களால் நம் மாநிலத்தில் மட்டுமல்ல நம்முடைய இந்த நாட்டின் கல்வியில் மிகப்பெரிய
புரட்சி ஏற்படும் என்ற நம்பிக்கயுள்ளது”
முதலமைச்சர் அவர்கள் “இந்த மக்களின் நன்மைக்காக நிச்சயம்
செய்வோம். அடுத்து உங்கள் ஊரில் தொடங்கவுள்ள பள்ளியின் திறப்பு விழா ஒரு மாதம்
கழித்து வைத்துகொள்வோம். பத்தாம்வகுப்பு மற்றும் பணிரெண்டாம் வகுப்பு தேர்வுகள்
முடித்தவுடன் திறப்புவிழா வைத்தால்தான் குழந்தைகளின் கல்விக்கு இடையூறுகள்
இல்லாமல் இருக்கும்”
இரகுபதி வாத்தியார் “இதுவும் நல்லதுதான். அரசுக்கு ஆதரவாக
நாங்கள் இருப்போம். எங்கள் ஊரின் பக்கத்தில் உள்ள கிராமங்களிலும் இதுபோன்ற
கோரிக்கைகள் வருகின்றது”
முதலமைச்சர் அவர்கள் “மக்களின் நன்மைக்கு தேவையான
நடவடிக்கைகளை இந்த அரசு எடுக்கும். மக்கள் தங்கள் கோரிக்கைகளை முறைப்படி
தெரிவிக்கலாம். எல்லா நேரங்களிலும் போராட்டம் செய்வது நல்ல முடிவை கொடுக்காது.
அதற்க்கு உங்களின் ஒத்துழைப்பு தேவை, உங்கள் ஊரின் பக்கத்தில் உள்ள
கிராமங்களுக்கும் அரசுப்பளிகள் வேண்டும் அல்லது இருக்கின்ற பள்ளிகளின் தரம்
உயர்த்த வேண்டுமென்றால் முறைப்படி விண்ணப்பங்களை மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்கச்
சொல்லுங்கள், தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்”
கோபி “நாங்கள் வருகின்றோம். உங்களின் இந்த முடிவை அரசாணையாக
வெளியிட்டால் நல்லது”
முதலமைச்சர் அவர்கள் “அமைச்சரவை கூட்டம் நாளை
நடைபெறுகின்றது, அதில் விவாதம் செய்துவிட்டு அரசு புதிய சட்டத்தை விரைவில்
சட்டபேரவையில் தாக்கல் செய்வோம்”
முதலைமைச்சருடனான சந்திப்பு திருப்திகரமாக இருந்தது.
ஒருவராதிற்குள் அரசும் புதிய சட்டம் நிறைவேற்றியது. பழைய கல்விஉரிமைச்சட்டத்தை மாற்றிவிட்டு புதிய
சட்டம் இயற்றப்பட்டது. அனைவருக்கும் கட்டாய மற்றும் தரமான இலவச கல்விச்சட்டம்
உருவானது, கல்விக்கு எந்த வகையிலும் கட்டணம் வசூல் செய்ய கூடாது என்றும், தனியார்
பள்ளிகளை அரசே ஏற்று நடத்தும், பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டும்,
அனைவருக்கும் சமமான கல்வியை கொடுக்கும், கல்வியில் பாகுபாடுகள் இருக்காது போன்ற
நல்ல அம்சங்கள் இருந்தது. இந்தியாவில் சமூகநீதியை கொண்டுவரும் சட்டங்களை
வகுப்பதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருகின்றது என்று பல்வேறு
தேசிய நாழிதழ்கள் எழுதின, சமூக ஆர்வலர்களும் கல்வியாளர்கள் பலரும் அரசின் இந்த
முயற்சிக்கு வரவேற்பு கொடுத்தனர். UNESCO, UN போன்ற பன்னாட்டு அமைப்புகள் தமிழக
அரசை புகழ்ந்து பேசியது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள், உலக வங்கி மற்றும் இன்னும்
நிறைய அமைப்புகள் அரசிற்கு உதவுவதற்க்கும் முன்வந்தன.
இப்போது புதுபிரச்சனை உருவானது. தனியார் பள்ளிகள் தங்களின்
அடிபடை உரிமையை பறிக்கும் சட்டத்தை அரசு நிறைவேற்றி உள்ளது என்றும், அரசியலமைப்பு
சட்டம் ஆர்டிக்கிள் 19 (g)யின் படி இந்திய குடிமகனுக்கு விருப்பப்பட்ட எந்த
தொழிலையும் செய்யும் உரிமை உள்ளது என்றும், அரசின் தற்போதைய சட்டம் எங்களின்
அடிப்படை உரிமையை பறிபதாக இருபதாக கூறி உயர் நீதிமன்றதை அணுகினார்கள். சிறுபான்மை
மக்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களின் சார்பாகவும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள்
அரசிற்கு எதிராக தொடுக்கப்பட்டது. அரசியலமைப்பு ஆர்டிக்கள் 3௦-ன் படி சிறுபான்மை மக்கள் கல்விநிலையங்களை உருவாக்கி
அவற்றை நிர்வகிக்கும் உரிமை உள்ளது, இந்த அடிபடை உரிமையை பறிக்க நினைக்கும் எந்தஒரு
அரசின் சட்டமும் செல்லாது.
அரசிற்கு எதிராக தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு எதிர்பு
தெரிவித்து உண்ணாவிரத போராட்டங்களில் ஈடுபட தொடங்கியது. தொடர் போராட்டங்களில்
சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களும் ஈடுபட்டனர். அரசிற்கு ஆதரவாக
சாதாரண மக்கள் போராட்ட துவங்கினார்கள். நாழிதழ்களிலும் செய்தி தொலைகாட்சிகளிலும்
விவாதங்கள் நடைபெற்றன. ஒரு தனியார் தொலைகாட்சியில் “தனியார் பள்ளிகளால்
சமூகத்திற்கு தீமையா? நன்மையா?” என்ற
விவாத நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விவாத நிகழ்ச்சிக்கு கோபி அவர்கள்
சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். விவாதம் தனியார் பள்ளிகளால் நன்மைகள் தான்
அதிகம் என்ற தலைப்பில் பல நபர்கள் பேசினார்கள், அதுபோலவே தீமைகள் அதிகமாக
உள்ளதாகவும் நிறைய பேர்கள் கருத்து தெருவித்தனர்.
விவாத நிகழ்சியின் முடிவில் கோபி அவர்களுக்கு பல கேள்விகள்
வந்தன. ஒருவர் கேட்டார் “என்பெயர் சூர்யா. இன்றைக்கு அரசு பள்ளிகளில் தரம்
குறைந்து இருப்பதால்தான் தனியார் பள்ளிகள் வந்தன, அரசு பள்ளிகளில் கல்வியின் தரம்
குறைந்துவிட்டது, மீண்டும் அரசுப்பள்ளிகள் வந்தால் நாங்கள் எங்கள் குழந்தைகளை வேறு
மாநிலங்களில் படிக்கவைப்பது என்ற முடிவை எடுப்போம்”
கோபி “கல்வியில் “தரம்” (Quality) என்று நீங்கள் எதை நினைக்கின்றீர்கள், தரம் என்பது
பார்பவரின் கண்ணோட்டதை பொருத்து மாறும். கல்வியில் “தரம்” என்பதை வரையறை செய்வது
கடினமானது. நீங்கள் கூறியதை போன்று தனியார் பள்ளிகளால் கல்வியில் தரம் உயர்கின்றது
என்று நினைத்தால் அது தவறு, ASER அறிக்கை ஆண்டுதோறும் வெளியிடுகின்றது, PISA ஆய்வு
வெளிவந்தது, இதில் நம்முடைய கல்வியின் தரம் என்ன?”
சூர்யா “இந்த மாதிரியான ஆய்வுகளில் பிரச்சனைகள் உள்ளது, இதை
உதராணமாக எடுப்பது தவறு. இன்று தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
மதிப்பெண் பார்த்தால் உங்களுக்கு தெரியும், ஒவ்வொரு ஆண்டும் தனியார் பள்ளிகளில்
படிக்கும் மாணவர்களின் மதிப்பெண்கள் உயர்ந்துகொண்டே செல்கின்றது”
கோபி “மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தான் கல்வியின் தரத்தை
நிர்ணயம் செய்வது சரியானதா? மதிப்பெண் (Mark) அடிப்படையில் தரத்தை நிர்ணயிப்பதில்
எனக்கு உடன்பாடில்லை. உதராணமாக ஒரு மாணவன் நல்ல மதிப்பெண்கள் எடுத்துள்ளான், இவன்
தெரிந்தே சமுகத்திற்கு தீங்கு விளைவிக்கும் குற்றசெயல்களில் ஈடுபடுகின்றான் என்று
வைத்துக்கொள்ளுங்கள், இந்த மாணவன் பெற்ற கல்வி தரமானதா?”
இன்னொருவர் எழுந்து “என்னுடைய பெயர் தீபா, தனியார்
மென்பொருள் நிறுவனம் ஒன்றில் வேலைபார்கின்றேன். நல்ல மதிப்பெண் எடுத்தால்தான்
பொறியியல், மருத்துவம் படிக்க கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல படிப்பை
படித்தால் வேலைகிடைக்கும்”
கோபி “நீங்கள் கூறுவது உண்மை உள்ளது ஆனால் முழுவதும் உண்மை
அல்ல. மதிப்பெண்கள் எடுபதற்க்கும் கல்லூரிகளை இடத்திற்கும் எந்தளவிற்கு சம்பந்தம்
உள்ளது என்பதை பார்ப்போம். சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள் கல்லூரிகளில்
உள்ள பொறியியல் அல்லது மருத்துவம் இடங்களைப் பொறுத்துதான் ஒருவருக்கு பொறியியல்
படிக்கவோ அல்லது மருத்துவம் படிக்கவோ இடம் கிடைக்குமே தவிர மதிப்பெண் எந்த
அளவிற்க்கு மதிப்பெண் சார்ந்துள்ளது. உதராணமாக தென்னிந்தியாவில் அதிக மருத்துவ
மற்றும் பொறியியல் கல்லூரிகள் உள்ளன அதனால் இங்கு மருத்துவம் படிக்கவோ அல்லது
பொறியியல் படிக்கவோ வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இதுபோல் தான் படிப்புக்கும்
வேலைக்கும் உள்ள சம்பந்தமும், சந்தையின் நிலவரத்தை பொறுத்துதான் வேலைவாய்பு
இருக்கும், 2001 முதல் 2003 வரை கணிப்பொறி துறை மற்றும் மென்பொருள் பொறியியல் துறையிலும் மந்தமாக
இருந்தது, அதுபோன்றுதான் தற்போதையை வேலைவாய்ப்பு நிலவரமும், எத்தைனையோ படித்த
இளைஞர்கள், நல்ல கல்லூரியில் படித்து நல்ல ரேங்க் எடுத்து வேலையில்லாமல்
இருகின்றார்கள். நல்ல மதிப்பெண் எடுப்பது, நல்ல கல்லூரிகளில் படிப்பதற்கும்
வேலைக்கும் சம்பந்தமே இல்லை என்பதை நான் முற்றிலுமாக மறுக்கவில்லை, இன்னும் நிறைய
காரணிகள் உண்டு என்று கூறுகின்றேன்.”
இன்னொருவர் எழுந்தார் “என் பெயர் கவிராஜ், நான்
அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகின்றேன். மத்திய அரசின் CBSE, பாடமுறைக்கும்
நம்முடைய பாடமுறைக்கும் நிறையவே வேறுபாடுகள் உள்ளன, அதுமட்டும் அல்ல உண்மையாக
வேலைசெய்யும் ஆசிரியர்கள் எத்தனை பேர்கள் அரசுப்பள்ளிகள் இருகின்றார்கள்? அரசு
வேலைகிடைத்தால் போதும் அப்புறம் வேலைசெய்ய வேண்டாம் என்ற மனநிலையில்தான் நிறைய
ஆசிரியர்கள் வேலைபார்கின்றார்கள், இதுபோன்ற காரணங்களுக்காகதான் எங்கள்
குழந்தைகளை தனியார் பள்ளிகளுக்கு
அனுப்புகின்றோம்”.
கோபி “கவிராஜ். அரசு பள்ளிகளில் பாடத்திட்டமுறை சரியில்லை,
ஆசிரியர்கள் ஒழுங்காக பணிபுரிவது கிடையாது, கட்டமைப்பு வசதிகள் கிடையாது போன்ற
எத்தனையோ காரணங்கள் நீங்கள் சொல்லலாம், இதையெல்லாம் சரிசெய்ய குரல் கொடுப்பதை
விட்டுவிட்டு தன்னுடைய குழந்தையின் நலத்தை மட்டும் பார்ப்பது சரியானதா? சமூகஅக்கறையுடன்
செயல்பட்டு இந்த கல்வித்துறையை உயர்த்த முன்னில் நிற்க வேண்டிய நீங்களே இப்படி
சொல்வது நியாயமா?”
இன்னொருவர் எழுந்தார் “சார் என் பெயர் வேதநாயகம், அரசு
ஆசிரியாராக பணிபுரிந்து ஒய்வுபெற்றபின் தனியார் பள்ளிநடத்தி வருகின்றேன். அரசு நிர்ணயம்
செய்த கட்டணம் மட்டும்தான் நாங்கள் வசூல் செய்கின்றோம். இந்த சமூகத்திற்கு கல்வி
சேவையை நாங்களும் செய்கின்றோம். தற்போதையை சட்டம் எங்களைப் போன்ற சமூகநலவாதிகளையும்
பாதிகின்றது.”
கோபி “வேதநாயகம் அவர்களே! உங்கள் மனசாட்சியிடம் கேட்டு
சொல்லுங்கள் எத்தனை தனியார் பள்ளிகள் அரசு நிர்ணகித்த கட்டணத்தை மட்டும் வசூல்
செய்கின்றது. பொதுவாக அனைத்து தனியார் பள்ளிகளும் சொல்லும் ஒரு வாக்கியம் சமூக
சேவை. சமூக சேவைதான் ஒத்துகொள்கின்றேன், ஆனால் இது ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கும்
மட்டுமான சேவை, சமூக நீதிக்கு எதிரான சமூக சேவை”
வேதநாயகம் “சார் நாங்க சமூக சேவை செய்கின்றோம் என்பதை
ஒத்துகொள்கின்றீர்கள், பிறகு சமூக நீதிக்கு எதிரானது என்று எப்படி சொல்லமுடியும்?’
கோபி “நீங்கள் செய்யும் சமூக சேவை, ஒரு குறிப்பிட்ட
சமூகத்திற்கு (வசதியானவர்கள்) மட்டும் செய்யும் சேவை. இப்படி சமூகத்தை பிரித்து
பார்ப்பது சமூக நீதி அல்ல”
வேதநாயகம் “சமூக நீதி அப்படின்னா என்ன சார்?”
கோபி “நம்ம சமூகத்தில இருக்கிற பொருளாதார, கல்வி, அரசியல்,
அதிகாரம் இவற்றில் அனைவருக்கம் சமமான வாய்ப்பு உள்ளதா என்பதை பற்றியதுதான் சமூக
நீதி. கல்வியில் சமூக நீதி அப்படின்னா என்னன்னு பார்ப்போம் ஒரு உதாரணம்
சொல்லுகின்றேன், நீங்கள் கற்பனை செய்து கொள்ளுங்கள். நான்கு நபர்கள்
இருகின்றார்கள், ஒரு கேக் (Cake) கொடுக்கப் படுகின்றது அதை நான்கு பகுதியாக
பிரித்து மற்றவர்களுக்கு கொடுக்கவேண்டும். ஒரு நிபந்தனை உண்டு, கேக்கை பிரிப்பரவர்
இறுதியாக தன்னுடைய பங்கை எடுக்க வேண்டும். நீங்கள் கேக்கை பிரிப்பவராக இருந்தால்
என்ன பண்ணுவீங்க? இது ஜான் ரால்ஸ் அவர்களின் நீதி (Justice).”
வேதநாயகம் “சமமாக பிரிப்பேன்”
கோபி “அதுமாதிரிதான் கல்வி அனைவருக்கும் சமமாக இருக்க
வேண்டும். சமூகத்தில் கல்வியில் சமமில்லை என்றால் அந்த சமூகத்தில் பிரிவினைகளும்
ஏற்றத்தாழ்வுகளும் அதிகமாகிவிடும். கல்வி என்பது சமூக பொருள் (Social Goods),
அரசாங்கம் அதை வழிநடத்தி முறைபடுதும்போது அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்”.
விவாதம் தொடர்ந்து நடைபெற்றது. தனியார் பள்ளிகளின் சார்பாக
பேசிய பலர் சிந்திக்க தொடங்கினார்கள். சிலபேர் தனியார் பள்ளிகள் மூடினால்
கல்வியின் தரம் குறைந்து போய்விடும் என்று ஆணித்தரமாக நம்பினார்கள்.
ஒருமாதம் ஆகிவிட்டது, பள்ளிகளில் ஆண்டுத் தேர்வுகள்
முடிந்தது. தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளின் போராட்டம் தீவிரமானது. அரசிற்கு
ஆதரவாக மக்கள் போராட தொடங்கினார்கள். தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளின்
போராட்டத்திற்கு பெரிய அரசியல் கட்சிகள் யாரும் ஆதரவு தரவில்லை.
அரசாங்கம், இரகுபதி வாத்தியார் ஊரில் அரசு மேல்நிலைப்பள்ளி
திறப்பது மட்டும் இல்லாமல், அங்குள்ள தனியார் பள்ளிகளை மூடப்போகின்றது. எனவே தனியார்
பள்ளிகளின் போராட்டம் தீவிரமானது, சில இடங்களில் போராட்டம் கலவரமானது. சட்ட
ஒழுங்கை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க பொதுநல வழக்கு ஓன்று தொடங்கப்பட்டது.
நீதிமன்றம் தனியார் மற்றும் சிறுபான்மை பள்ளிகளின் போராட்டத்திற்கு கண்டனம்
தெரிவித்தது. நீதிமன்றத்தில் வழக்கு இருக்கும்போது இதுபோன்ற போராட்டங்கள்
தேவையற்றது என்ற கருத்தை தெரிவித்தது. அரசு வழக்குரைஞர் அவர்களிடம் பத்திரிகை
நிருபர்கள் கேட்டார்கள் அரசின் இந்த சட்டம் செல்லுமா? அரசு வழக்குரைஞர் சொன்னார்,
அரசு இந்த வழக்கில் வெற்றிபெறும் என்ற நம்பிக்கை உள்ளது. சமூக நீதிக்காக அடிப்படை
உரிமைகளில் மாற்றம் கொண்டுவரலாம் என்று சில வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
வழங்கியுள்ளது.
இரகுபதி வாத்தியாரின் ஊரில் மேல்நிலை பள்ளி திறப்பதற்கான
அனைத்து ஏற்பாடுகளும் முடிந்துவிட்டது. முன்னால் அமைச்சர் கல்விசெல்வனின் பள்ளியை
அரசு மூடபோகின்றது என்பதை அறிந்த கல்விசெல்வன், தனது பள்ளி மேலாளரை பணிநீக்கம்
செய்தார். தன்னுடைய மற்ற கல்வி நிறுவனங்களையும் கல்லூரிகளையும் காப்பாற்றிக்கொள்ள
வேண்டும், அடுத்த முறையும் நம்முடைய கட்சி ஆட்சியை பிடிக்காது என்ற நிலவரத்தை
தெரிந்தவுடன் ஆளும்கட்சிக்கு தனது ஆதரவலர்களுடன் கட்சிதாவிவிட்டார். முதலமைச்சர்
அவர்கள் திறப்புவிழாவிற்க்கு வருகை தருவதால் அந்த மாவட்டமே விழாக்கோலம்
பூண்டிருந்தது.
அந்த நாள் வந்துவிட்டது. முதலமைச்சர் அவர்கள் விழா தலைமை
உரையாற்ற வந்தார் “இங்கு கூடியிருக்கும் எனது உடன் பிறப்புகளே! வணக்கம்... இன்று
உங்களுடைய கிராமம் இந்திய வரலாற்றில் இடம்பெறப்போகுகின்றது. எத்தனை எதிர்ப்புகள்
வந்தாலும் மக்களின் நலனுக்காக இருப்பது இந்த அரசு தான்.... இந்தியாவில் சமூக
நீதியை காப்பதற்காக அரசுகொள்கைகள் வகுப்பதில் நம்முடைய அரசு ஓர் முன்மாதிரியாக
உள்ளது. இந்த சட்டத்தின் சிறப்பு அம்சங்கள் பலபேருக்கு தெரியவில்லை. மக்களுக்கு
எதிராக இருக்கும் சில தீயசக்திகளின் தூண்டுதலின் பெயரால் போராட்டங்கள் நடைபெற்று
வருகின்றது. இந்த சட்டத்தில் உள்ள சிறப்பு அம்சங்கள்
1.
அனைவருக்கும் தரமான இலவசக்கல்வி
2.
சமத்துவமான கல்வி. ஏழை பணக்காரன் என்ற பாகுபாடுகள் இல்லாத கல்வி
3.
பாடத்திட்டத்தில் CBSEக்கு இணையான பாடத்திட்டம்.
4.
தாய்மொழியில் அடிப்படைகல்வி
5.
ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பயிற்சி
6.
+2 முடித்தவர்களுக்கு நேரடி ஆசிரியர்பயிற்சி ஐந்து ஆண்டுகள், ஆசிரியர் பயிற்சி
பல்கலைக்கழகங்களில் மட்டுமே நடத்தப்படும்
7.
இளங்கலைப் பயின்று ஆசிரியர் பயிற்சிக்கு வந்தால் மூன்று ஆண்டுகள். பொறியியல்,
மருத்துவம் படித்தவர்களுக்கும் ஆசிரியார் பயிற்சியில் சேர வாய்ப்பு
8.
மத்திய அரசின் அகில இந்திய அளவிலான பொறியியல் மற்றும் மருத்துவத்திற்கான
நுழைவுத்தேர்வுகள் தமிழில் நடத்த வேண்டும். மத்திய அரசிற்கு கோரிக்கை
அனுப்பப்பட்டு உள்ளது.
9.
ஆசிரியர்களின் செயல்பாடுகள் ஒவ்வொரு ஆண்டும் கண்காணிக்கப்படும்.
10.
சிறுபான்மை மக்கள் தங்கள் மதம் மற்றும் கலாசார கல்வியை இலவசமாக அளிக்கலாம்.
அதற்கு அரசு எந்த தடையும் விதிப்பதில்லை.
இன்னும் எராளமான நன்மைகள் உள்ளது. தற்போது வழக்கு நீதிமன்றத்தில்
உள்ளது, தீர்ப்பு வந்தவுடன் மூன்று ஆண்டுகளில் அனைத்து ஊர்களிலும் அரசுப்பள்ளிகள்
ஏற்ப்படுத்தபடும். இதற்கான ஆறு பேர் அடங்கிய குழு ஓன்று ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற
தலைமை நீதிபதிகள் அவர்களின் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது, இலட்சுமிநாராயணன்
மற்றும் கோபியும் உறுபினர்களாக உள்ளனர். இரகுபதி ஆசிரியரை இந்த பள்ளிக்கு
தலைமையாசிரியராகவும் செழியன் அவர்களை இந்த பள்ளியின் உதவிதலைமையாசிரியராக இந்த
அரசு நியமனம் செய்கின்றது. செழியன் அவர்கள் பள்ளியில் பணிபுரிந்த ஆசிரியர்கள்
அனைவரையும் ஒப்பந்த ஆசிரியர்களாக பணியில் சேர்த்துகொள்கின்றோம். அவர்கள் ஆசிரியர்
தகுதித் தேர்வில் தேர்ச்சி அடைந்தவுடன் பணி நிரந்தரம் செய்யப்படும். இந்த
போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து மக்களுக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளையும்
வாழ்த்துகளையும் தெரிவித்துகொள்கின்றேன்.
[1] A
Subramani, CBSC Schools must follow govt fee structure, rules court; The Times of India,
Sep 21, 2012, Retrived from http://timesofindia.indiatimes.com/city/chennai/CBSE-Schools-must-follow-govt-fee-structure-rules-court/articleshow/16488367.cms on April
07, 2014
[2] N Ramya, Rs 17L for kindergarten seat in Tamil
Nadu, parents vie to pay, The Times of India, Nov 28, 2012, taken from http://timesofindia.indiatimes.com/city/chennai/Rs-17L-for-kindergarten-seat-in-Tamil-Nadu-parents-vie-to-pay/articleshow/17395411.cms on April
07, 2014
[3] Muhamed Imranullah S, PIL plea against sale of
uniforms, bags in Schools, The Hindu, March 11, 2014, Retrived from http://www.thehindu.com/news/national/tamil-nadu/pil-plea-against-sale-of-uniforms-bags-in-schools/article5771131.ece on April
07, 2014
[6] V.K Madhavan, The obsession with Private Schools,
Live Mint, April 29, 2013 Retrived from http://www.livemint.com/Opinion/Xy4Y6F7q3LuqVtGOzhk6nI/The-obsession-with-private-schools.html on 09th April, 2014
[7]
Hemalatha Ragupathi, Tamil Nadu- Dead letter, Education World, March 06, 2014
Retrived from http://www.educationworldonline.net/index.php/page-article-choice-more-id-3977
on April 09, 2014
[8] Saradha Mohan Kumar, For 100% Result and
reputation, many schools ask ‘weak’ students to leave, The Times of India,
April 09, 2014, Retrived from http://timesofindia.indiatimes.com/home/education/news/For-100-result-and-reputation-many-schools-ask-weak-students-to-leave/articleshow/33473260.cms on April
09, 2014
[9] அங்கீகாரமில்லாத 723 பள்ளி அட்மிஷன் ரத்து: மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்ற நடவடிக்கை,
தி இந்து, April 23, 2014 Retrived from http://tamil.thehindu.com/tamilnadu/அங்கீகாரமில்லாத-723-பள்ளி-அட்மிஷன்-ரத்து-மாணவர்களை-வேறு-பள்ளிக்கு-மாற்ற-நடவடிக்கை/article5939711.ece on 23th April
2014